சங்ககிரி ஊராட்சி ஒன்றித்திற்குள்பட்ட  பூத்தாலக்குட்டை ஏரியில் பனை விதைகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யும் பணிகளை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி ரோட்டரி கிளப் தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றித்திற்குள்பட்ட  பூத்தாலக்குட்டை ஏரியில் பனை விதைகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யும் பணிகளை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி ரோட்டரி கிளப் தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர்.

சங்ககிரி  அருகே  உள்ள பூத்தாலக்குட்டை ஏரியில் ஆயிரம் பனை விதைகள் நடவு 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை ஏரியில்  சங்ககிரி நேர்மை குழு மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் பல்வேறு  ஞ

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை ஏரியில்  சங்ககிரி நேர்மை குழு மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் பல்வேறு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தலாக்குட்டை ஏரியில் இயற்கையை பாதுகாக்க சங்ககிரி நேர்மை குழு மற்றும் சங்ககிரி ரோட்டரி சங்கமும்  இணைந்து  ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.  இப்பணிகளை முன்னதாக ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். 

சங்கச் செயலர் என்.தியாகராஜன், மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, நேர்மை குழு நிர்வாகிகள் சுரேஷ், பிரகாஷ், கவின், அஜீத்,நிசாந்த், நவீன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com