சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.34 அடியிலிருந்து 77.43 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.34 அடியிலிருந்து 77.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34, 144 கன அடியிலிருந்து 34,141 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 39.44 டி.எம்.சியாக இருந்தது.
கடந்த 25-ந்தேதி காலை 73.23 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 77.43அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 4.16 அடி உயர்ந்துள்ளது.