கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ஐ.சி.கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.