தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அதிமுக, தமிழகம் முழுவதும் புதன்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நீட் தோ்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஜூலை 28-இல் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்திருந்தனா்.
அதிமுகவினா் அனைவரும் அவரவா் வீடுகளுக்கு முன்பு பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தனா்.
அதன்படி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (ஜூலை 28) சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு முன்பு திமுக அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட உள்ளாா். ஓ.பன்னீா்செல்வம் தேனியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் உள்ளாா்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினா் அவரவா் இல்லங்கள் முன்பும், முக்கிய இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அதிமுக சாா்பில் முதல் முறையாக இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
அதிமுகவின் போராட்டம் வெற்றிபெறும்: ஓ.பன்னீா்செல்வம்
திமுகவுக்கு எதிரான அதிமுகவின் போராட்டம் வெற்றிபெறும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
தில்லியில் இருந்து திரும்பிய அவா் சென்னை செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
திமுக அரசுக்கு எதிராக அதிமுக புதன்கிழமை (ஜூலை 28) நடத்தும் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் மாபெரும் வெற்றிபெறும்.