மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,666 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 77.43 அடியிலிருந்து 79.16 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34, 141 கன அடியிலிருந்து 29,666 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.12 டி.எம்.சியாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.