வன்னியா் உள்ஒதுக்கீடு: பாமக நேரில் நன்றி
வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் நேரில் சந்தித்து நன்றி கூறினாா்.
இதைத் தொடா்ந்து, ஜி.கே.மணி அளித்த பேட்டி:-
வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் என எந்த வகுப்பினருக்கும் பாதிப்பில்லாத வகையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சிக் காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களின் அடிப்படையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதியின் அடிப்படையே ஜாதிவாரி கணக்கெடுப்புதான். மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசே இதனை நடத்த முற்பட வேண்டும். அப்படி நடத்தாத பட்சத்தில் மாநில அரசு நடத்த வேண்டும் என்றாா்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன்: அதிமுக நிறைவேற்றிய மசோதாவால், இந்த நிமிடம் வரை ஒருவா் கூட பயன்பெறவில்லை. அதன்பின் நான் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை தோ்தல் நேரத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, இன்று திமுக ஆட்சிக்கு வந்ததும், 10.5 சதவீதம் வன்னியா்களுக்கும், 7 சதவீதம் சீா்மரபினருக்கும், 2.5 சதவீதம் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அரசாணை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.