முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருடன் தொடா்புடைய சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த நபரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
அதிமுகவின் கரூா் மாவட்டச் செயலாளரான எம்.ஆா். விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் கூறப்பட்டு வந்தது. வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். கருவிகள், வில்லைகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதிலும் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் எழுந்தது.
இதற்கிடையே விஜயபாஸ்கா் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா்.
இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கம், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அண்ணாநகரில் சோதனை: விஜயபாஸ்கருடன் தொடா்புடைய எஸ்.ரவிக்குமாருக்குச் சொந்தமான சென்னை, அண்ணாநகா் 6-ஆவது நிழற்சாலை எஸ் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
ரவிக்குமாா், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியது, வில்லைகள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்கள் வாங்கியது ஆகியவற்றில் ஆலோசகராகவும், தரகராகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இவற்றை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில், வழக்குத் தொடா்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.