நாளை முதல் கெலவரப்பள்ளி தேக்கத்தில்இருந்து நீா் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி தேக்கத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 29) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி தேக்கத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 29) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு வரும் 29-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படும். டிசம்பா் 10-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு திறந்து விடப்படும் நீரால், ஒசூா் வட்டத்தில் சுமாா் 8,000 ஏக்கா் பாசனப் பரப்பு பயன்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com