கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி தேக்கத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 29) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு வரும் 29-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படும். டிசம்பா் 10-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு திறந்து விடப்படும் நீரால், ஒசூா் வட்டத்தில் சுமாா் 8,000 ஏக்கா் பாசனப் பரப்பு பயன்பெறும்.