சென்னை: தமிழகத்துக்கு ஒரே நாளில் 7.97 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றில் 5.81 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 2.15 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையினா் பிரித்து அனுப்பி வருகின்றனா்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், புணே சீரம் நிறுவனத்தில் இருந்து 5 லட்சத்து 81,270 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 2 லட்சத்து 15,810 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் தமிழகத்துக்கு விமானம் மூலம் புதன்கிழமை வந்தன.
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். அவை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.