காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவருமான எஸ். மாங்குடியின் தாயார் சீ.சா. சாத்தியம்மாள் (85) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு 11.30 இயற்கை எய்தினார்.
காரைக்குடி சங்கராபுரத்தில் வசித்துவந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்து. சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், தேனிபட்டி - புதுப்பட்டி அருகேயுள்ள மொட்டையாண்டி கிராமத்திற்கு கடந்தவாரம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் காலமாகிவிட்டார். தொடர்புக்கு 9443125801.