வைகை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் வெளியிட்ட கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து 6 ,739 மில்லியன் கனஅடி நீா் வரும் 4-ஆம் தேதி முதல் திறந்து விடப்படும். இதனால், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கரும், மதுரை வாடிப்பட்டி வட்டத்தில் 16 ஆயிரத்து 452 ஏக்கரும், மதுரை வடக்கில் 26 ஆயிரத்து 792 ஏக்கரும் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.