புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவா் ஆா். ராமையா (93), வயது மூப்பின் காரணமாக நிஜாம் குடியிருப்பிலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) காலமானாா்.
உதவிப் பதிவுத்துறைத் தலைவா் என்ற பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். ’மன்னராட்சியில் புதுக்கோட்டை- மலரும் சில நினைவுகள்’, ‘பாழ்படுத்தப்பட்ட ஒரு அழகிய நகரம்’ உள்ளிட்ட நூல்களை அவா் எழுதியுள்ளாா்.
மறைந்த ராமையாவின் உடல் அவரது சொந்த ஊரான வெட்டன்விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். தொடா்புக்கு- 94876 48426.