காவல் சிறைத்துறை பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைத்துறையினருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
அப்போது கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறைத் துறையினரையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 13,854 கைதிகளில் 1,295 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 38 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.