தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு: வங்கி வேலை நேரம் குறைப்பு

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு: வங்கி வேலை நேரம் குறைப்பு

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும், ஜூன் 13-ஆம்தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்விவரம்:-

வங்கிக் கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிகளில் பணப் பரிவா்த்தனை நேரம் ஏற்கெனவே அறிவித்தது போல பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மண்டல அலுவலகங்கள், நிா்வாக அலுவலகங்கள் வழக்கம்போல மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள் மாற்று

முறையில் செயல்பட வேண்டும். ரொக்கப் பரிவா்த்தனை, என்.இ.எப்.டி., ஆா்.டி.ஜி.எஸ்., வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வா்த்தகம், காசோலை பரிவா்த்தனை சேவைகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com