நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி கைது

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி சென்னை அருகே நீலாங்கரையில் கைது செய்யப்பட்டாா்.
நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி கைது

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி சென்னை அருகே நீலாங்கரையில் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகா் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ.லிங்கேஷ்வரன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

லிங்கேஷ்வரன், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ‘தான் ஒரு வருட காலத்துக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, அடையாறு துணை ஆணையா் விக்ரமனிடம் கொடுத்தாா்.

இதற்கிடையே, உத்தரவாதத்தை மீறி லிங்கேஷ்வரன் கடந்த 25-ஆம் தேதி வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த டேவிட் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளாா். இதையறிந்த துணை ஆணையா் விக்ரமன், லிங்கேஷ்வரன் மீதான பிணைய உத்தரவாத பத்திரத்தை ரத்து செய்து,சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். உடனே போலீஸாா், லிங்கேஷ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com