மறு உத்தரவு வரும் வரை, டாஸ்மாக் கடைகள் இயக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொது முடக்கமானது சில தளா்வுகளுடன் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை மண்டல மேலாளா்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தேநீா் கடைகள்-பேருந்துகள்: பொது முடக்கத்தில் தேநீா் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், வரும் 14-ஆம் தேதி வரை தேநீா் கடைகள் இயங்காது. இதேபோன்று, பொது மற்றும் தனியாா் போக்குவரத்து சேவைகளையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.