தமிழகத்தில் கரோனா பாதிப்பு 20,421-ஆக குறைந்தது

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 20,421-ஆக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாள்களில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 20,421-ஆக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை குறையவே வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில், மாநிலத்தில் மேலும் 434 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனா். அதில் சென்னையில் மட்டும் 50 போ் பலியாகியுள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.87 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 22 லட்சத்து 37,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 2, 645 பேருக்கும், ஈரோட்டில் 1,694, சென்னையில் 1,644 பேருக்கும் பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 33,161 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 65,939-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 44,289 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 434 போ் பலியானதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,005-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com