தமிழகத்தில் கருப்புப் பூஞ்சைக்கு கூடுதல் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, தமிழகத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 938 பேருக்கு 35 ஆயிரம் மருந்துகள் தேவையான நிலையில், 3,840 குப்பிகள் மட்டுமே வந்துள்ளன.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும்.
குன்னூர் தடுப்பூசி தொழிற்சாலையில் மருந்துகளை குப்பியில் நிரப்பும் பணிக்கு அனுமதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.