மாநில வளா்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்தாா். மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவுக்கான துணைத் தலைவா், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனா். துணைத் தலைவராக பொருளாதாரப் பேராசிரியா் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், பலா் உறுப்பினா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், கொள்கைக் குழு உறுப்பினரும், சட்டப் பேரவை உறுப்பினருமான டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.