சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை புதன்கிழமை மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
புதன்கிழமை மாலை ஆளுரை சந்தித்தும் பேசவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வருடன் தலைமைச் செயலாளர், மருத்தவத்துறை செயலாளர் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளது.