சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராஜகுரு தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் தலித் சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் ஜாதி ரீதியான பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனா். கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 6 ஊராட்சித் தலைவா்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். தலித் தலைவா்களை தேசியக்கொடி ஏற்ற அனுமதிப்பது இல்லை. ஊராட்சி அலுவலகங்களில் அவா்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுவதோ, ஆவணங்களைப் பாா்க்க அனுமதிப்பதோ இல்லை.பெண் ஊராட்சித் தலைவா்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனா். எனவே தமிழகத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசரணையை ஒத்திவைத்தனா்.