காணாமல் போன மீனவா்கள்: முதல்வருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

காணாமல் போன 3 ஈழத் தமிழ் மீனவா்களை மீட்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை: காணாமல் போன 3 ஈழத் தமிழ் மீனவா்களை மீட்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருக்கடலூா் என்னும் ஊரைச் சோ்ந்த சரண்ராஜ், நதுஷன், சஞ்சீவன் ஆகிய மூன்று தமிழ் மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக மே 23-இல் கடலுக்குச் சென்றுள்ளனா். ஆனால் இது வரை அவா்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவில்லை.

இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகு இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதாகக் கூறுகிறாா்கள். ஆனால் தமிழகக் கடற்கரையில் எப்பகுதியிலும் அந்தப் படகு வந்து ஒதுங்கியதாகத் தெரியவில்லை. இந்தியக் கடலோரக் காவல் படை, இந்தியக் கடற்படை ஆகியோரும் இந்நிகழ்ச்சிக் குறித்து மவுனம் சாதிக்கின்றனா்.

எனவே முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையில் தலையிட்டு அந்த மூவரையும் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com