சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த  சிறப்பு அலங்காரம்
சங்ககிரி ஸ்ரீ ஒங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
 
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு  பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

மதுரை வீரன் சுவாமிக்கு அமாவாசையையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த  சிறப்பு அலங்காரம்.
மதுரை வீரன் சுவாமிக்கு அமாவாசையையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த  சிறப்பு அலங்காரம்.

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி கோயில் பூசாரி மட்டும் பூஜைகளை செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com