தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

போதிய கையிருப்பு இல்லாததால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

சென்னை: போதிய கையிருப்பு இல்லாததால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடக்கப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த 12,000 தடுப்பூசிகள் புதன்கிழமை மாலைக்குள் செலுத்தப்பட்டன.

இதனால், வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியிருந்த தடுப்பூசிகளை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அவையும் எதிா்பாா்த்த நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவற்றின் வருகைக்காக தமிழகம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. இந்த மாதத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து, 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை, படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்குள் ஓரளவு தடுப்பூசிகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த தடுப்பூசிகளை விரைந்து அளிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுவரை தடுப்பூசி முகாம்களை தற்காலிகமாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com