தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு டிஐஜியாக எஸ்.லட்சுமி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்டாா். அந்த உத்தரவு விவரம்:-
தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஐஜியாக இருந்த ராதிகா, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால் அந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பணியிடத்துக்கு காத்திருப்போா் பட்டியலில் இருந்த எஸ்.லட்சுமியை நியமித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக லட்சுமி, ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பாா்.