தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் கடைசி இடம்: ஓ.பன்னீர்செல்வம்

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் கடைசி இடம்: ஓ.பன்னீர்செல்வம்

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் கடை இடத்தை வகிக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் கடை இடத்தை வகிக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் தடுப்பூசி தொழிற்சாலை என தடுப்பூசி குறித்து தமிழ்நாட்டில் பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
7.6.2021 நாளைய நிலவரப்படி, அகில இந்திய அளவில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 38 விழுக்காடு நபர்கள் ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாகவும், திரிபுராவில் 92 விழுக்காட்டினரும், இமாச்சல பிரதேசத்தில் 77 விழுக்காட்டினரும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகண்ட், கோவா, குஜராம், கேரளம் போன்ற மாநிலங்களில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 தமிழ்நாட்டைவிட பின்தங்கிய மாநிலங்களான பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில்தான் வெறும் 19 விழுக்காடு மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கடை இடத்தை வகிக்கிறது. 
 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருப்பதால், இந்தப் பிரிவினிருக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாததாக கருதப்படுகிறது. மூன்றாவது அலை வருவதற்குள் இந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டால்தான் வருங்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரிவிலேயே 19 விழுக்காடு அளவுக்குதான் தடுப்பூசிகர் செலுத்தப்படுகிறது என்றால், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவில் இதைவிட குறைவான அளவுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். அதேசமயத்தில், தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளத்திலிருந்து தெரிய வருகிறது. 
மேற்படி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாகத் தெரிய வருகிறது.
 எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேவைப்படின், புள்ளி விவரங்களுடன் பிரமரை நேரில் சந்தித், விரிவாக எடுத்துரைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com