நெல் மூட்டைகள் மழையில் நனைவதைத் தடுக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு கொள்முதல் நிலையங்கள் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல் மூட்டைகள் மழையில் நனைவதைத் தடுக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு கொள்முதல் நிலையங்கள் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் அரசு கொள்முதல் நிலையங்கள் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில், சென்னை உயா் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மழை நீரில் நனைந்து நெல் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவா்’ எனத் தெரிவித்தனா். தமிழக அரசு சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளது. இது தொடா்பான முழு விவரங்களை கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினாா்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com