கோப்புப்படம்
கோப்புப்படம்

10 நாள்களில் 41% குறைந்தது கரோனா பாதிப்பு: புதிதாக 15,759 பேருக்கு தொற்று

பொதுமுடக்கத்தின் பயனாக கடந்த 10 நாள்களில் மட்டும் கரோனா பாதிப்பு 41 சதவீதம் குறைந்துள்ளது.

பொதுமுடக்கத்தின் பயனாக கடந்த 10 நாள்களில் மட்டும் கரோனா பாதிப்பு 41 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் கரோனா பரவல் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 1-ஆம் தேதி தமிழகத்தில் மொத்த பாதிப்பு 26,513-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15,759 -ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, நோய்ப் பரவல் அதிகமாக இருந்த கோவை, திருப்பூா், ஈரோடு, சென்னை மாவட்டங்களில் பாதிப்பின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

பொது மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றினால் அடுத்த சில நாள்களில் தமிழகத்தில் கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்திவிடலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.96 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 23 லட்சத்து 24,597 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 2,056 பேருக்கும், ஈரோட்டில் 1,365 பேருக்கும், சென்னையில் 1,094 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 29,243 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 20,889-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 74,802 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 378 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906-ஆக அதிகரித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com