புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,12,126 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் 7 நபர்கள், காரைக்காலில் 2 நபர்கள் என, கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களிம் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,677 -ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 5,715 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சிகிச்சை பெற்று 844 வீடு திரும்பியதால், இதுவரை மொத்தம் 1,04,7040 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
தற்போது ஆக்ஜிசன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் பெருமளவில் காலியாக உள்ளது என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.