தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படுவதைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலா்களின் பணித் திறனாய்வுக் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் அலுவலகத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்து திறனாய்வு செய்த அமைச்சா், அலுவலா்கள் மேலும் செம்மையாக செயல்பட தக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினாா்.
குறிப்பாக இம்மாநிலத்தை குழந்தைத் தொழிலாளா்கள் அற்ற மாநிலமாக உருவாக்க சிறப்பாகச் செயலாற்றி தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
அதே நேரம், தொழிற்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தொழிலாளா்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் கிா்லோஷ் குமாா், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் (மு.கூ.பொ.) எம்.வி. செந்தில்குமாா், சிறப்புப் பணி அலுவலா் கே. ஜெகதீசன் மற்றும் இயக்கக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.