முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு, ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு, ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ.50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதுக்கான தகுதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய தளமான  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் இணைய வழியாக மட்டுமே ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com