தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு கரோனா; 267 போ் பலி

தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு கரோனா; 267 போ் பலி

தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 14,016 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,77,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 14,016 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,895 பேருக்கும், ஈரோட்டில் 1,323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,53,721ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 25,895 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 74,247-ஆக அதிகரித்துள்ளது. 
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 49,927 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 267 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com