தைக்கால் பிரம்புப் பொருள் உற்பத்தி முடக்கம்

​சீர்காழி அருகே பாரம்பரியம் மிக்க தைக்கால் பிரம்புப் பொருள்கள் உற்பத்தி முடங்கியது. கிராமம் முழுவதும் மூடிக்கிடக்கும் கடைகளால் வெறிச்சோடிய கடைவீதி. 5000 பேர் வேலை இழப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு.
பிரம்புப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்.
பிரம்புப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்.


சீர்காழி அருகே பாரம்பரியம் மிக்க தைக்கால் பிரம்புப் பொருள்கள் உற்பத்தி முடங்கியது. கிராமம் முழுவதும் மூடிக்கிடக்கும் கடைகளால் வெறிச்சோடிய கடைவீதி. 5000 பேர் வேலை இழப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு.

கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிக்கிடக்கும் பிரம்புப் பொருள்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பாரம்பரிய பிரம்பு பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரன குடிசை தொழிலாக தொடங்கிய பிரம்புப்  பொருள்கள் தயாரிப்பு தற்போது இரண்டு கி.மீ தூரம் சாலை இருபுறமும் 200 க்கும் மேற்பட்ட உற்பத்தி கூடங்களும் விற்பனையகங்களும் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கபடும் பிரம்புப் பொருள்கள் புவிசார் குறியீடு பெரும் அளவு பாரம்பரியமும் தரமும் வாய்ந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிது.

பிரம்புப் பொருள்களான நாற்காலி. ஊஞ்சல். சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில் மற்றும் மிகுந்த கலைநயம் மிக்க கைவினை பொருள்களும் உற்பத்தி செய்யபடுகின்றன. இந்த பிரம்புப் பொருல்கள் ஊற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சியாம், பெரம்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். 

பிரம்புப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்.

தற்போதைய கரோனா ஊரங்கால்  தைக்கால் பிரம்பு பொருட்கள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. இதனால் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த சுமார் 5000 தொழிலாளர்கள் வேலைவாய்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளனர். கடந்த ஆண்டும் உற்பத்தி செய்த பொருட்ளை முழுமையாக  விற்பனை செய்ய முடியாத நிலையில், தற்போதை ஊரடங்கு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளே அதிகம் பிரம்புரம்பு பொருள்களை வாங்கி செல்வது வழக்கம். 

பிரம்புப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்.

கடந்த கரோனா அலையின் தாக்கம் குறைந்து சுற்றுலாவும் ஆன்மீக தலங்களும் முழு பயன்பாட்டுக்கு வராத நிலையில் இரண்டாம் அலையால் இவர்களின் வாழ்கை கோள்விக்குறியாகியுள்ளது. கிராமத்தில் இருபுறமும் பிரம்புப் பொருள்காளால் போர்த்தியதுபோல் காட்சியளித்த தைக்கால் கிராமம் தற்போதை ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது. எனவே தங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com