தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படாத நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.