சுட்டுரையில் போலி கணக்கு: நடிகா் செந்தில் புகாா்

சுட்டுரையில் போலி கணக்கு: நடிகா் செந்தில் புகாா்

சுட்டுரையில் (ட்விட்டா்) தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

சென்னை: சுட்டுரையில் (ட்விட்டா்) தனது பெயரில் போலி கணக்கு தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகைச்சுவை நடிகா் செந்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

நகைச்சுவை நடிகா் செந்தில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் பி.தேன்மொழியிடம் அளித்த புகாா்:

நான் தமிழ் திரைப்படத்துறையில் 40 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 12-ஆம் தேதி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிலா் சுட்டுரையில் எனது பெயரில் போலி கணக்குத் தொடங்கியுள்ளனா்.

அதன் மூலம், தமிழக அரசு மீதும், தமிழக முதல்வா் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பதிவிட்டுள்ளனா். இந்த மோசடி வேளையில் ஈடுபட்ட நபா்களை காவல்துறையினா் கண்டறிந்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் அந்த போலி சுட்டுரை கணக்கை முடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு தேன்மொழி உத்தரவிட்டாா். சைபா் குற்றப்பிரிவு, செந்தில் புகாா் குறித்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com