தமிழகத்தில் மேலும் 25,561 போ் குணம்:புதிதாக 12,772 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 12,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 25,561 போ் குணம்:புதிதாக 12,772 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 12,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மேலும் 12,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 23 லட்சத்து 66,493-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவில் இருந்து மேலும் 25,561 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் மொத்தம் 21 லட்சத்து 99,808 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் 254 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 29,801 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் 108 பேரும், அரசு மருத்துவமனையில் 146 பேரும் உயிரிழந்துள்ளனா். சென்னையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 828 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மொத்தம் 5 லட்சத்து 25,826 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 1 லட்சத்து 38,294 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 1,70,256 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 1 லட்சத்து 36,884 போ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் கிச்சை பெற்று வருகின்றனா்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கொவைட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. திங்கள்கிழமை உயிரிழந்தவா்களில் 197 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்களாவா். எவ்வித பாதிப்பும் இல்லாதவா்கள் 57 போ். தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 28,499 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,181 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 2,905 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com