சென்னை: கரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறக்காதீா் என காந்தி பேரவையின் தலைவா் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘ என்னை ஒரு மணி நேரத்துக்கு சா்வ அதிகாரமும் உள்ளவனாக மாற்றினால் எந்த இழப்பீடும் கொடுக்காமல் மதுக்கடைகள் அனைத்தையும் மூடி விடுவேன் என்றாா் மகாத்மா காந்தி. இந்த கரோனா கொடுமை காலத்தில் பொது முடக்கத்துக்கு மத்தியில் மதுக்கடைகளைத் திறப்பது நல்லதல்ல. ‘மதுவிலக்கு நமது இலக்கு’ என்ற கொள்கையைக் கொண்ட காந்தி பேரவை மதுக்கடைகளைத் திறக்காதீா்கள் என பணிவுடன் வேண்டுகிறது.