சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து வீட்டிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,683 பேராகக் குறைந்துள்ளது.
சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,27,835 ஆக உள்ளது. இவர்களில் 5,15,199 பேர் குணமடைந்துவிட்டனர். 4,683 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1 சதவீதமாகும். 7,953 பேர் பலியாகிவிட்னர்.
அது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 500 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் சுமார் 4 ஆயிரம் வரை சென்ற இந்த எண்ணிக்கை தற்போது 500 ஆகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் மட்டும் 504 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மண்டலங்களில் 500க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர்.