அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப் பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ரூ.70 கோடி செலவில் மதுரையில் சா்வதேச தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடக்கப்படும்.