புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனைத்து நபா்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடா்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டைகோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபா்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் மற்றும் சா்க்கரை போன்ற பொருள்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.