தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட உத்தரவில்,
தமிழகத்தில் இரண்டு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படவுள்ளது.
பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து கண் கண்ணாடியை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.