சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,351 ஆக உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையிலும் கரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 3,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,30,034 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,095 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,18,588 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் நேற்று(புதன்கிழமை) மட்டும் 29,132 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகரில் 300க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.