மாதாந்திர பயணச் சலுகைச் சீட்டு பெறுவோா் கவனத்துக்கு...

மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயணச் சலுகைச் சீட்டை சனிக்கிழமை வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநகரப் பேருந்துகளில் மாதாந்திர பயணச் சலுகைச் சீட்டை சனிக்கிழமை வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000), ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமை (ஜூன் 26) வரையில், இந்த பயண அட்டையை வழங்கிட அனுமதித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 29 மையங்களில், இந்த பயண அட்டையைப் பொதுமக்கள் பெற்றுக்கொண்டு, வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை பயணம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com