கரோனா டெல்டா பிளஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்பு? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா டெல்டா பிளஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
ம.பொ.சி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மய
ம.பொ.சி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மய


கரோனா டெல்டா பிளஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் 116 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மயிலை வேலு, பிரபாகர் ராஜா, எழிலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டில் பெரியளவில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை அடுத்த வாரம் முதல்வர் திறந்துவைக்கிறார். 

அதேபோன்று, அனைத்து வட்டார, மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றின் பாதிப்பின் அளவு குறைந்துள்ளதால், டயாலிசிஸ், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சைக்கு கவனம் செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில், கரோனா டெல்டா பிளஸ் தொற்றுக்கு இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் பெங்களூருவில் பரிசோதிக்கப்பட்டன. அவர்களின் குடும்பத்தார் மற்றும் அருகே வசிப்பவர்கள், அவர்களின் உறவினர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  டெல்டா பிளஸ் தொற்று பாதிக்கப்பட்ட 9 பேரும் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

டெல்டா பிளஸ் தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், டெல்டா பிளஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த மையத்திற்கு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 2 கோடி வரை செலவாகும். இதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த மையம் செயல்பாட்டிற்குவந்துவிடும். இந்த மையம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் பரிசோதனை முடிவுகள் விரைவாக கிடைக்கும். பரிசோதனை மாதிரிகளை வெளிமாநிலத்திற்கு அனுப்ப வேண்டியிருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com