நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 86.90 அடியிலிருந்து 86.16 அடியாக சரிந்தது.
நேற்று காலை வினாடிக்கு 3,568 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 5,948 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 48.37டி.எம்.சி.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.