சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை ககன்தீப் சிங் பேடி இன்று துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் வழங்கப்பட்டது.
இந்த வாகனத்தை, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்து பார்வையிட்டார்.