நாமக்கல் தொகுதியில் துணை ராணுவத்தினர், போலீஸார் அணி வகுப்பு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நாமக்கல் தொகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
நாமக்கல் தொகுதியில் அணிவகுத்து சென்ற துணை ராணுவத்தினர்.
நாமக்கல் தொகுதியில் அணிவகுத்து சென்ற துணை ராணுவத்தினர்.

நாமக்கல்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நாமக்கல் தொகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் தொகுதிக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து 90 படைவீரர்கள் வந்திருந்தனர். அவர்கள் நாமக்கல்- துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் நாமக்கல் நகரப் பகுதியில் புதன்கிழமை துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி மற்றும் காவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த துணை ராணுவத்தினர், காவல்துறையினர் அணிவகுப்பானது நாமக்கல் காவல் நிலையத்தில் தொடங்கி திருச்சி சாலை, அண்ணாசாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பேருந்து நிலைய சாலை வழியாக மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com