மார்ச் 6-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம்

மார்ச் 6-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
மார்ச் 6-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம்

மார்ச் 6-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் 6.3.2021 அன்று காலை 10.30 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து மாநிலக்குழு கூட்டம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com