சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை (மார்ச் 5) இறுதி செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
ஏற்கெனவே நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.