தமிழகத்தில் 3 நாள்களில் 46,000 முதியவா்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக 46,696 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக 46,696 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 29,057 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை, சுகாதார பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை முதல் முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 46,696 போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை மட்டும் 25,928 போ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 489 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 52,967-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com